சினிமா

கமல் சாரோட நட்பை நானே கெடுத்துட்டேன்! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் லிவிங்ஸ்டன்!

Published by
பால முருகன்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகர்களில் மிகவும் பிடித்தவர்களுக்கு வெளியே தெரியாமலே பல உதவிகளை செய்த தகவலை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமான நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இறப்பதற்கு முன்பு கமல்ஹாசன் செய்த உதவிகளை பற்றி பேசி இருந்தார்.

இவர் கமல்ஹாசனுடன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட ஆர்.எஸ்.சிவாஜிகாக மருத்துவ செலவு மற்றும் அவருக்கு மாதம் மாதம் தேவையான மருந்துகளை தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி வந்து கொண்டிருந்தார். இதனை நெகிழ்ச்சியுடன் ஆர்.எஸ்.சிவாஜி இறப்பதற்கு முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இவரை போலவே, கமல்ஹாசனுடன் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் நட்பாக இருந்தவர் நடிகர் காமெடி நடிகர் லிவிங்ஸ்டன். இவர் கமலுடன் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவரை கமலுக்கு மிகவும் பிடிக்குமாம். தன்னுடைய வீட்டில் எதாவது நிகழ்ச்சி அல்லது நல்ல விஷயம் நடந்தாலும் கூட லிவிங்ஸ்டனை விருந்திற்காக அழைப்பாராம்.

அது மட்டுமின்றி அடிக்கடி லிவிங்ஸ்டன் வீட்டிற்கு கால் செய்து நலம் விசாரித்து விட்டு வீட்டிற்கு அழைப்பாராம். ஆனால், அந்த சமயம் பொறுப்பற்ற தன்மை காரணமாக லிவிங்ஸ்டன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். வீட்டிற்கு அழைத்தாலும் அந்த சமயம் பெரிதாக லிவிங்ஸ்டன் இதை பற்றி யோசித்தது இல்லயாம். அதனை நினைத்து தான் இப்போது மிகவும் வருத்தப்படுவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் ” கமல் சாருடைய நட்பு எனக்கு ஆரம்ப காலத்தில் கிடைத்தது. ஆனால், அந்த சமயத்தில் இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த நட்பு எனக்கு இப்போது இருந்திருந்தால் நான் மிகவும் சந்தோஷமாக இருந்திருப்பேன். நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கும் மனிதரில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். ஒருவரை வைத்து எதாவது காரியம்  ஆகுற வரைக்கும் நட்பு வைக்கிற ஆள் வரு  இல்ல.

அவருடைய குணமே வேறே. ஒரு வருடம் பழகினால் உண்மையாக பழகுவார் .  என்னுடைய அலட்சியம் காரணமாகவே நான் அவருடன் உள்ள நட்பை கெடுத்துவிட்டேன். அதனை இப்போது நினைத்து பார்க்கும் போது மிகவும் வருத்தப்படுகிறேன். இப்போது நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என லிவிங்ஸ்டன் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

2 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

3 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

4 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

4 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

5 hours ago