ஓடிடியில் மட்டும் இத்தனை கோடியா? முரட்டு வியாபாரத்தில் புஷ்பா 2!!

Published by
பால முருகன்

புஷ்பா 2  : அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட்  விற்பனை விலை குறித்த தகவல் இந்திய சினிமாவையே அதிர வைத்து இருக்கிறது.

இந்திய சினிமாவே காத்து இருக்கும் திரைப்படங்களில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் “புஷ்பா 2” படமும் ஒன்று. இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார்.  படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 400 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் படத்தில் இருந்து பாடல்களையும் படக்குழு வெளியீட்டு கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே, ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடலும், ‘சூடானா’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எங்கயோ கொண்டு சென்று இருக்கும் நிலையில், படத்தின் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட்  விற்பனை விலை குறித்த தகவல் வெளியாகி பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பா படத்தின் ஓடிடி உரிமையயை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ( Netflix ) நிறுவனம் கிட்டத்தட்ட 250 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். அதைப்போல, படத்தின் சேட்டிலைட்  உரிமையை ஸ்டார் மா (Star Maa) சேனல் 135 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். படத்தின் பட்ஜெட் 400 கோடி தான். இதனை படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையில் கிட்டத்தட்ட பட்ஜெட்  பணத்தை எடுத்து இருப்பது இந்திய சினிமாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட 385 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கும் நிலையில், படம் வெளியான பிறகு வசூலிலும் ஒரு கலக்கு கலக்கும். எனவே, படத்தை தயாரிக்கும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு பண மழை தான் கொட்டப்போகிறது என்கிறது கோடம்பாக்கம்.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

15 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

15 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

16 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

16 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 hours ago