vijayakanth [File Image]
நடிகர் விஜயகாந்த் பல ஹிட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தது ஒரு புறம் இருந்தாலும் மற்றோரு பக்கம் அவர் செய்த உதவிகள் மற்றும் அவர் செய்த நல்ல விஷயங்களே அவரை மக்களுக்கு பிடிக்க உதவியாக அமைந்தது என்றே சொல்லலாம். சாப்பாடு மற்றும் பிரபலங்களை பிரச்னையில் இருந்து விஜயகாந்த் காப்பாற்றியது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.
ஆனால், அதனையும் தாண்டி தயாரிப்பாளர்களின் கஷடத்தை உணர்ந்து விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் படங்களில் நடித்து இருக்கிறாராம். அந்த வகையில், விஜயகாந்த் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நடித்த ‘கூலிக்காரன்’ படத்தில் நடிக்க சம்பளமே வாங்கவில்லையாம். இந்த தகவலை அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ” விஜயகாந்த் என்றுமே தயாரிப்பாளர்கள் சம்பளம் தரவில்லை என்று சொல்லவே சொல்லாத ஒரு நல்ல மனிதர். அவருக்கு சம்பளமே கொடுக்கவில்லை என்றாலும் கூட அதனை பற்றி பெரிதாக யோசிக்கவே மாட்டார். நான் விஜயகாந்தை வைத்து கூலிக்காரன் படத்தை தயாரித்து இருந்தேன்.
பெரிய பிரச்சனையில் இருந்து பிரபல நடிகரை காப்பாற்றிய விஜயகாந்த்!
இந்த திரைப்படத்தினை அவரை வைத்து தயாரிக்கும்போது சம்பளத்தை எடுத்துக்கொண்டு கொடுக்க சென்றேன். வேண்டாம் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்போது நாங்கள் இருந்த சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது அதனால் அப்போது சம்பளம் வாங்கினோம் இப்போது கொஞ்சம் நன்றாக இருக்கிறோம்.
இப்போது உங்களிடம் நன்றாக பழகி இருக்கிறோம். எனவே, இந்த நேரம் உங்களிடம் ஏன் பணம் வாங்கவேண்டும்? என்ற எண்ணம் எனக்குள் தோணுகிறது. இதனால் எனக்கு பணம் வேண்டாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் ” என விஜயகாந்த் கூறியதாக தாணு கூறியுள்ளார். மேலும், கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான இந்த கூலிக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
இப்படி இவ்வளவு பெரிய ஹிட் படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல நல்ல விஷயங்களை செய்துள்ள விஜயகாந்த் தற்போது பழைய நிலைமையில் இல்லாமல் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமிபதி வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…