madurai high court lokesh kanagaraj [file image]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்து பல மாதங்கள் கடந்த நிலையில், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்ததாக கூறி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
அவர் கொடுத்து இருந்த அந்த மனுவில் லியோ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிறைய காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படத்தில் மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி ஆயுத கலாச்சாரமும், முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, உள்ளிட்ட பல வன்முறை காட்சிகளை வைத்து இருக்கிறார்.
லியோவில் வன்முறை காட்சிகள்! லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய மனு!
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மனநிலையை உளவியலாளர் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்படங்களில் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறார் எனவும் ” மனுவில் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பதில் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மண்டல தணிக்கை குழு அதிகாரி, லோகேஷ் கனகராஜ் மனுதாரர் ஆகியோரும் பதில் மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தது. விரைவில் லோகேஷ் கனகராஜ் பதில் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…