சினிமா

தயவு செஞ்சு டெலிட் பண்ணுங்க! இமானிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்?

Published by
பால முருகன்

நடிகர் சிவகார்த்திகயேன், இசையமைப்பாளர் டி.இமான் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்ற தெளிவான காரணம் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. இருவரும் இன்னும் தங்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்பதனை பற்றி வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இமான் கூட பேட்டிகளில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் படம் செய்யமாட்டேன் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்து இருந்தார்.

இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்! இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு!

ஆனால், என்ன காரணம் என்று கேட்டதற்கு அதனை வெளியே சொல்ல முடியாது அது சொன்னால் என்னுடைய குழந்தைகளின் வாழ்கை பாதிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். அதன்பிறகு இசையமைப்பாளர் இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேச, இமானின் விவாகரத்து பற்றி தான் சிவகார்த்திகேயன் – இமானுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்ற பேச்சு கிளம்பியது.

அதன்பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட விவாகரத்து காரணம் இல்லை எனவும்,  டி.இமான் தன்னுடைய முதல் மனைவியான மோனிகாவை கடந்த  2020-ஆம் ஆண்டு தான் விவாகரத்து செய்தார். அதன்பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இமான் -சிவகார்த்திகேயன் விவகாரத்தில் புது திருப்பம்! மௌனம் கலைப்பாரா எஸ்கே? 

எனவே, விவாகரத்து பிரச்சனையை வைத்து ஏதேனும் சிவகார்த்திகேயன் துரோகம் செய்திருந்தால் எப்படி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இருப்பார் என்று  ரசிகர்கள் கேள்வியும் எழுப்பினார்கள். இருப்பினும் இன்னும் சிவகார்த்திகேயன் இது பற்றி விளக்கம் கொடுத்த நிலையில், என்ன பிரச்சனை சிவகார்த்திகேயன் மீது தான் தவறு உள்ளதா என்றும் குழப்பம் இருக்கிறது.

இந்த நிலையில், டி.இமானிடம் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்லி கெஞ்சியுள்ளாராம். அந்த வீடியோ இருப்பது மிகவும் அசிங்கமாக இருப்பதாகவும் நான் உங்களுடைய காலில் கூட விழுகிறேன் என சிவகார்த்திகேயன் இமானிடம் கூறியதாகவும் பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான் இவ்வளவு நல்ல மனிதரா? குட்டி பத்மினி சொன்ன தகவலை கேட்டு கண்கலங்கும் ரசிகர்கள்!

இதனை டி.இமானே தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் டி.இமானிடம் சிவகார்த்திகேயன் கெஞ்சினாரா அப்படி கெஞ்சவில்லையா அல்லது துரோகம் செய்தாரா இல்லையா என எதை பற்றியும் சிவகார்த்திகேயன் பேசாமல் இருப்பது ஏன்? எனவும் பயில்வான் ரங்கநாதன் கேள்வியும் எழுப்பி இருக்கிறார். விரைவில் இதை பற்றி சிவகார்த்திகேயன் பேசுவாரா இல்லையா என்பதை பற்றி பார்க்கலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

3 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

4 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

5 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

6 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

7 hours ago