தேசிய விருதை குறி வைத்த ‘கொட்டுக்காளி’! சஸ்பென்ஸுடன் வெளியான ட்ரைலர்!

Published by
கெளதம்

சென்னை : கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் இன்று (13-ம் தேதி) காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த படி, வெளியிடப்பட்டது. ட்ரைலர் பார்ப்பதற்கு ஒரு சஸ்பென்ஸுடன் மையக்கருவை நோக்கி நகர்கிறது.

சூரியின் நடிப்புக்கும், அன்னா பென் அமைதிக்கான காரணமும், சேவல் கூவலுக்கும் விடையானது படம் திரையரங்கில் வெளியான பிறகே தெரிய வரும். ஆனால், விடுதலை படத்தை போலவே இந்த படம் ஒரு தரமான கதையை சொல்ல போகிறது மட்டும் தெரளிவாக தெரிகிறது.


நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம் போர்ச்சுகல் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான லின்க்ஸ் விருதை வென்றுள்ளது. அது மட்டும் இல்லாமல், பெர்லின் சர்வதேச திரைப்பட விழா மற்றும் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. மேலும், பெர்லின் விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றிருக்கிறது.

நடிகர் சூரி கடைசியாக ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரின் ‘கருடன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றது. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமான சூரியின் இரண்டாவது படம் கொட்டுக்காளி ஆகும். நடிகை அன்னா பென்னுக்கு இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முதல் அறிமுகமாகும்.

Published by
கெளதம்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

7 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

7 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

9 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

9 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

10 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

10 hours ago