மீண்டும் லண்டனில் துப்பறிய தொடங்கிய இயக்குனர் விஷால்.! துப்பறிவாளன்-2 புதிய அப்டேட்.!

Published by
மணிகண்டன்

விஷால் இயக்குனராக அறிமுகமாகும் துப்பறிவாளன் -2 படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளதாம்.

மிஷ்கின் இயக்கத்தில் 2017இல் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் துப்பறிவாளன். இதில் படத்தின் கதையும், அதனை சொல்லிய திரை மொழியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஹாலிவுட் படத்திற்கு இணையாக காட்சியமைப்புகள் இருந்தன. அந்த வரவேற்பை கண்டு அப்படத்தின் 2ஆம் பாகம் தயாராக இருந்தது.

கொரானாவுக்கு முன்னர் துப்பறிவாளன்-2ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்டபோது மிஷ்கின் தான் இயக்குனர். விஷால் தயாரிப்பாளராக இருந்தார். அதன் பின்னர், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பின்னர் விஷாலே இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் இப்பட வேலைகள் நடைபெறாமலே இருந்தது. அதனால், படம் டிராப் என கூறப்பட்டது.

ஆனால், அதனை பொய்யாக்கும் விதமாக தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஆரம்பிக்க உள்ளதாம். இப்பட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கி, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விரைவில் துப்பறிவாளன் 2 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

7 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

7 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

8 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

9 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

10 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

10 hours ago