Leo Film MADONNA [File Image]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19-ஆம் தேதி வெளியான லியோ படம் பாஸிட்டிவ் விமர்சனங்கள் உடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் 400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலரும் அந்ததந்த கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர். அந்த வகையில், லியோவில் கெஸ்ட் ரோலில் நடிகை மடோனா, நடிகர் அனுராக் காஷ்யப் நடித்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு திரையில் நடிக்கும் நேரம் என்பது குறைவு தான்.
இந்நிலையில், படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மடோனாவின் கதாபாத்திரம் குறித்து பலரும் விமர்சனம் செய்தனர். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் மடோனா இப்படத்தை தவிர்த்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் சிலர் தங்களது கருத்துக்களை எழுப்பினர். இதற்கு மடோனா பதிலளிக்கையில், “படத்தில் எனது கதாபாத்திரம் சிறிது, பெரியது என்றெல்லாம் பார்க்கவில்லை.
வாரிசு வசூலை மிஞ்சிய ‘லியோ’! அடுத்த டார்கெட் ‘விக்ரம்’ படத்திற்கு தான்?
100% உழைப்பை கொடுத்தால் போதும், அந்த கதாபாத்திரம் சிறப்பாக வரும். நன்றாக பேசப்படும்” என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தனது கேமியோவை ரகசியமாகவே வைத்திருந்தாராம். ஆனால், தனது அம்மாவிடம் மட்டுமே இந்த ரகசியத்தை சொன்னதாக கூறினார். மடோனா போலவே, நடிகர் அனுராக் காஷ்யபுக்கும் இந்த விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கைதி 2 அப்புறம் பாத்துக்கோங்க முதலில் நம்ம படம் தான்! லோகேஷிற்கு ரஜினி போட்ட கண்டிஷன்!
லியோ
லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய்யை தவிர இந்த படத்தில் த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…