சினிமா

லைக்காவுக்கு செலுத்த வேண்டிய தொகையை இன்னும் ஏன் செலுத்தவில்லை? நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Published by
பால முருகன்

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் நடிகர் விஷால் தயாரிப்பாளர் என்ற முறையில் தங்களிடம் வாங்கிய 21 கோடியே 25 லட்ச ரூபாயை செலுத்தவில்லை என்றும் இதன் காரணமாக தங்களுக்கு கொடுக்கப்படவேண்டிய பணத்தைக்கொடுக்கவேண்டும்,  அதுவரை அவர் தயாரிக்கும் படங்களை வெளியிட கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம்  மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் விஷால் 15 கோடி பணத்தை நீதிமன்றத்தில்  செலுத்தவேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. உத்தரவிடப்பட்டு இன்னும் விஷால் தரப்பில் இருந்து இந்த பணம் செலுத்தப்படவில்லை. சொத்து தொடர்பான ஆவணங்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், லைக்கா தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷால் கடந்த 2021-ம் ஆண்டு  80 கோடிக்கு வங்கி மூலம்  பணப்பரிவர்த்தனை  செய்துள்ளார். எனவே பணம் இருந்துகொண்டே வேண்டுமென்றே எங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தராமல் இருக்கிறார்.

அதே சமயம் நடிகர் விஷால் தரப்பில் இந்த பணத்தை செலுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஆனால், அதற்கான பேச்சுவார்த்தைக்கு லைக்கா நிறுவனம் உடன் படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். லைக்கா தரப்பும், விஷால் தரப்பும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாலும் நீதிமன்றம் உத்தரவிட்ட  அந்த 15 கோடியை எதற்காக இன்னும் விஷால் தரப்பு செலுத்தவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும், தங்களுக்கு கொடுக்கவேண்டிய பாதி பணத்தையாவது கொடுக்க ஆணையிடவேண்டும் எனவும் லைக்கா புகார் அளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் நீதிமன்றம் உத்தரவிட்ட அந்த 15 கோடி பணத்தை எதற்காக செலுத்தவில்லை அதற்கான விளக்கத்தை கொடுக்கவேண்டும் என கூறி வழக்கை வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

22 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

45 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

59 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago