சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லாம் யாரும் மதிக்க கூட மாட்டிக்காங்க! யாஷிகா ஆனந்த் பேச்சு!

Published by
பால முருகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிய வந்த பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது என்றே கூறலாம். இவர் தற்போது நடிகர் ரிச்சர்டிற்கு ஜோடியாக ‘சில நொடிகளில்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை யாஷிகா ஆனந்த் ” பிக் பாஸ் நிகழ்ச்சியை இப்போது யாருமே மதிக்க கூட மாட்டிகிறார்கள். எப்போது வீட்டிற்குள் ஸ்மால் பாஸ் என்கிற விதிமுறை கொண்டு வந்தார்களோ அப்போதே பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் மதிக்காமல் இருக்கிறார்கள். இந்த சீசன் பிக் பாஸ் சீசனை நான் பார்த்த வரையில் எல்லாரும் கலாய்த்து தான் பேசி வருகிறார்கள்.

படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

என்னை பொறுத்தவரை பிரதீப்பை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருந்திருக்கலாம். அவர் வெளியே போன பிறகு தான் பிக் பாஸ் பார்க்கும் போட்டியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. நாங்கள் இருந்த சீசன்கள் எல்லாம் கமல் சாரை பார்த்து நடுங்குவோம். அந்த அளவிற்கு அவர் அந்த சமயம் எல்லாம் தப்பு செய்தால் கண்டிப்பார்” எனவும் நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களை சரியான மரியாதையுடன் நடத்தவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது. இதனால் தான் பெரிய சர்ச்சையே வெடித்தது, பலரும் அவருடைய தரப்பில் இருந்து நியாத்தை கேட்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

5 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

6 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

7 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

8 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

8 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

9 hours ago