Kamakshi lamp [File Image]
நம் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்திய காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு உடைந்து விட்டால் என்ன செய்வது மற்றும் பூஜை அறையில் எத்தனை விளக்கு போட வேண்டும் என்பது பற்றியும் எந்த எண்ணெயை பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
விளக்கு என்றாலே அது ஒளியை தரக்கூடிய பொருள். அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் உடைந்து விட்டாலோ அல்லது அந்த விளக்கில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டிருந்தாலும் அதை நாம் பயன்படுத்தக் கூடாது இவற்றை மாற்றி புதிய விளக்குகளை தான் பயன்படுத்த வேண்டும்.
அன்றாடம் ஏற்றி வழிபட்டு கொண்டிருந்த மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்திய விளக்குகள் பழையதானாலும் சிலர் ஞாபகத்திற்காக அப்படியே வைத்திருப்பார்கள். அப்படி செய்வது நல்லதல்ல. இந்த விளக்குகளை எல்லாம் நாம் மாற்றி புதிதாக தான் பயன்படுத்த வேண்டும்.
நாம் முதன் முதலில் புதிதாக காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு ஏற்றும்போது மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு தட்டில் பச்சரிசி மற்றும் சில்லறைகளை வைத்து அதன் மீது விளக்குகளை வைக்க வேண்டும். பிறகு அதிலே நெய் ஊற்றி ஏற்ற வேண்டும். அந்த நெய்யில் மூன்று அல்லது ஐந்து கற்கண்டுகளை போடலாம் இவ்வாறு செய்வது நல்லது.
பூஜை அறையில் ஒற்றை விளக்கு ஏற்றுவதை விட இரட்டை விளக்குகளை ஏற்றுவது மிகச் சிறப்பாகும், இது அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கொடுக்கும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் அதிக நேர்மறை ஆற்றல் இருக்கும்.
தங்கத்தை விட வெள்ளி உலோகத்திற்கு லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. வெள்ளி விளக்கு ஆடம்பர விளக்காக மட்டும் கருத வேண்டாம்.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…