லைஃப்ஸ்டைல்

Beauty Tips : கருவளையம் ஏற்பட என்ன காரணம்..? இதற்கு என்ன தீர்வு..!

Published by
லீனா

பொதுவாக பெண்கள் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.  அதிலும் இன்று பெரும்பாலான பெண்கள் கருவளையத்தை போக்க கெமிக்கல் கலந்த பல வகையான கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட கிரீம்களை பயன்படுத்தும் போது பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

கருவளையம் ஏற்படக் காரணம் 

கருவளையம் இன்று பெரும்பாலான பெண்களுக்கு காணப்படுகிறது. அதில்  குறிப்பாக தூக்கமின்மை கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக காணப்படுகிறது. தூக்கம் இல்லாத காரணத்தினால் கண்களுக்கு கீழ் திரட்சி ஏற்பட்டு கருவளையம் தோன்றுகிறது. எனவே தினமும்  குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்.

சிறுநீரக செயலிழப்பு, ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. சிலருக்கு மரபணு ரீதியாகவும் கருவளையம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் கண்களின் கீழ் உள்ள தோலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக காணப்படும் போதும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் அதிகமாக மொபைல் பார்ப்பது கருவளையம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கருவளையத்தை தடுக்க சில குறிப்புகள் 

கருவளையம் ஏற்படுவதை தடுக்க தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூங்குவது மிக அவசியமாகும். சிலருக்கு சூரிய ஒளியின் காரணமாகவும் கருவளையம் ஏற்படும் என்பதால் அப்படிப்பட்டவர்கள் வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்து செல்லலாம்.

இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதிகப்படியான உப்பு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருந்தாலும் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவது மிக அவசியமாகும்.

இயற்கையான வீட்டு வைத்தியம் 

பெரும்பாலானவர்கள் வீட்டில் காற்றாழை இருக்கும். இந்த கற்றாழையின் ஜெல்லை எடுத்து இரவு தூங்க செல்வதற்கு முன் கணைகளை சுற்றி தடவி விட்டு உறங்க செல்லலாம்.

அதே போல், வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி அதனை இரண்டு கண்களிலும் 30 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். இவை இயற்கையான முறையில் கருவளையத்தை போக்க கூடிய சில வழிகள் ஆகும்.

Published by
லீனா

Recent Posts

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

2 minutes ago

கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…

16 minutes ago

‘ஜூலை 7ம் தேதி பொறியியல் கலந்தாய்வு’ – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…

49 minutes ago

“இபிஎஸ் தான் முதலமைச்சர்.., தவெகவை NDAவுக்குள் கொண்டுவர முயற்சி” – ராஜேந்திரபாலாஜி.!

சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…

1 hour ago

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

3 hours ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

4 hours ago