blood pressure
ரத்தக்கொதிப்பு -ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமானால் ரத்த கொதிப்பு ஏற்படுகிறது.ரத்த கொதிப்பு வந்துவிட்டாலே அதன் இணைப்பாக சர்க்கரை நோய் ,கல்லிரல் பாதிப்பு ,கண்கோளாறும் வந்துவிடும் .நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பராமரித்தால் இதிலிருந்து தப்பித்து விடலாம் .
உடலில் உப்பு அதிகமாக இருப்பது ,பரம்பரை பிரச்சனை இருப்பது, உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
உப்பின் அளவு குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது. அதேபோல் எண்ணெயின் அளவும் ஒரு நாளைக்கு ஐந்து மில்லி போதுமானது. மேலும் எண்ணெயில் பொரித்த ,வருத்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தயிரை மதிய உணவுகளில் எடுத்துக்கொள்ளவும். பச்சை நிற கீரைகள் குறிப்பாக பசலைக்கீரை, புளிச்சக்கீரை .காய்கறிகளில் பொட்டாசியம் சத்து மிக அதிகமாக இருக்கும் சோடியம் குறைவாக தான் இருக்கும். அதனால் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
முள்ளங்கி ,மக்காச்சோளம், கருணைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, கொத்தவரங்காய் ,அவரைக்காய், முருங்கைக்காய், கத்திரிக்காய் ,வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், நூல்கோல், சௌசௌ, காராமணி போன்ற பயிர் வகைகள் மற்றும் பருப்பு வகைகள் வாழைத்தண்டு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.
பழங்களில் வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆப்பிள், விட்டமின் சி அதிகம் உள்ள பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை தர்பூசணி போன்ற அனைத்து பழங்களும் எடுத்துக் கொள்ளலாம். கூடவே சர்க்கரை நோய் இருந்தால் பழங்களை முறையாக கையாள வேண்டும்.
ஏனென்றால் பழங்களில் ப்ரக்டோஸ் இருக்கும். இதனால் ஒரு துண்டு பழம் எடுத்துக் கொள்வது போதுமானதாக இருக்கும் .மேலும் நன்கு பழுத்த பழங்களை தவிர்க்க வேண்டும்.
அசைவ வகையில் அவித்த முட்டை, மீன் ,கோழி போன்றவற்றை வேக வைத்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பொறித்ததை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆட்டு இறைச்சி, சிவப்பு இறைச்சி முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உணவுமுறையுடன் உடற்பயிற்சி ,தியானம் ,மேற்கொள்ளவும் .டென்ஷனை குறைக்கவும் .
ஆகவே நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் அளவு தான் மிக முக்கியம் அதை கவனமுடன் பின்பற்ற வேண்டும்.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…