Paneer recipe-ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து அதில் பன்னீரை நான்கு புறமும் லேசாக வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ,இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை தாளிக்கவும் ,வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும், பிறகு இதில் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், காஸ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும். இப்போது இதை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும் இரண்டு நிமிடம் கிளறி பிறகு சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இப்போது வெண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் வதக்கவும் .பிறகு கரம் மசாலா மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். முந்திரியை சிறிதளவு பால் ஊற்றி மைய அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.பிறகு இதை ஐந்து நிமிடம் மிதமான வேக வைத்து பன்னீரையும் சேர்த்து பன்னீரில் மசாலா படும் வரை ஒரு இரண்டு நிமிடத்திற்கு குறைவான தீயில் வேக வைத்துக் கொள்ளவும்.இப்போது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் மசாலா தயாராகிவிடும்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…