இன்று சர்வதேச புலிகள் தினம்!

Published by
லீனா

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. காட்டுக்கு ராஜா சிங்கம் தான். ஆனால், கம்பீரமான தோற்றமும், தனித்து நின்று போராட கூடிய குணமும் கொண்ட விலங்கு புலி. இந்த புலிகளை நாம் கூட்டமாக பார்க்க முடியாது. புலிகள் சிங்கத்தை கூட தோற்கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புலிகளை நமது முன்னோர்கள் நேரடியாகவோ அல்லது காடுகளிலோ பார்த்திருக்க கூடும். ஆனால், நமது தலைமுறையினர் இன்று தொலைக்காட்சிகளிலும், விலங்குகள் அருங்காட்சியகத்தில் தான் பார்க்க முடிகிறது. நமக்கடுத்து வரும் சந்ததியினர் அருங்காட்சியகத்திலாவது பார்க்க முடியுமா என்றால் அது கேள்வி குறி தான்.

புலிகள் தோலுக்காகவும், வியாபாரத்திற்காகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் வேட்டையாடப்படுகிறது. புலிகள் அதிகமாக வாழும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில உள்ளது. இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியாவும் உள்ளது.

வனவிலங்குகள் இறைவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடை. அவற்றிற்கு உயிர்வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டுமே தவிர, அவற்றை அழித்து நாம் உயிர்வாழ்வதற்கான வழிகளை மேற்கொள்ள கூடாது. எனவே வனவிலங்குகள் அழிக்கப்படுவதை தடுப்போம். அவற்றை பாதுகாப்போம்.

 

Published by
லீனா

Recent Posts

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

6 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

20 minutes ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

1 hour ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

1 hour ago

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

18 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

20 hours ago