மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார்.! பாஜக எம்.பி மீது போலீசார் வழக்குப்பதிவு.!
டெல்லியில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாகபாலியல் புகாருக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மலியுத்த வீராங்கணை சம்மேள தலைவராக பொறுப்பில் இருக்கும் பாஜக எம்பி பிரிஜ் புஷன் சரண்சிங், வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார் எனவும் அவர் மீது பாலியல் குற்றம் ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வீராங்கனைகள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
அவர் நடப்பு எம்பி என்பதால் வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் தாமதிப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து வீராங்கனைகள், எம்பி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக எம்பி பிரிஜ் புஷன் சரண்சிங் மீது வழக்கு பதிவு செய்வதாக டெல்லி காவல்துறையினர் உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து , 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பெயரில் பாஜக எம்பி பிரிஜ் புஷன் சரண்சிங் மீது டெல்லி காவல் துறையானது போக்ஸோ சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…