Categories: இந்தியா

வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்!

Published by
கெளதம்

பீகார் : பீகார் மாநில சட்டசபையில், அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது.

போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி இந்த சட்டத்தை முன்வைத்தார்.

நீட் வினாத்தாள் கசிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பீகார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் விதிகளின்படி, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் அனைத்து போட்டி ஆட்சேர்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகள் அதன் ஆணையின் கீழ் வரும்.

அதன்படி, பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், பீகார் யுனிவர்சிட்டி சர்வீஸ் கமிஷன், பீகார் ஸ்டாஃப் சர்வீஸ் கமிஷன், பீகார் டெக்னிக்கல் சர்வீசஸ் கமிஷன், சென்ட்ரல் செலக்ஷன் போர்டு ஆஃப் கான்ஸ்டபிள்ஸ், பீகார் போலீஸ் சப்-ஆர்டினேட் சர்வீசஸ் கமிஷன் மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மசோதாவின் கட்டளையின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வின் போது தாள் கசிவுக்கான செய்திகளில் வந்த நிலையில், தேர்வு பிபிஎஸ்சியால் ரத்து செய்யப்பட்டு, இந்த மாதம் மீண்டும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

4 minutes ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

18 minutes ago

மதுரை எய்ம்ஸ்: “கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…

31 minutes ago

கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் – மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!

சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…

1 hour ago

எப்படி இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை? 3டி காட்சி வெளியீடு.!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…

1 hour ago

அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து.!

அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப்…

2 hours ago