ஒருநாளைக்கு 12மணி நேரம் என வாரத்துக்கு 4 நாட்கள் பணியால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும் என ஆளுநர் தமிழிசை கருத்து.
நேற்று முன்தினம் தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை என கூறப்பட்டுள்ளது.
12 மணி நேர வேலை சட்ட மசோதா
இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தோழமை கட்சிகளின் எதிர்ப்பையும் தாண்டி இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழிசை கருத்து
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருநாளைக்கு 12மணி நேரம் என வாரத்துக்கு 4 நாட்கள் பணியால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும். கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
8 மணி நேர வேலையா? 12 மணி நேர வேலையா? என தொழிலாளர்கள் விருப்பப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பது தான் சட்டம். அதிக நேரம் வேலை செய்து விட்டு அதிக நேரம் ஒய்வு எடுத்தால் மனித சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதிய சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை. 12 மணி நேர வேலை விவகாரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…