Terrorists Arrested [FILE IMAGE]
ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவி வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிகளை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்து வரும் சூழலில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், அந்த 5 பயங்கரவாதிகளையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளது.
அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், மூன்று கைக்குண்டுகள், ஒரு யுபிஜிஎல், இரண்டு கைத்துப்பாக்கி மேஜின்கள், 12 பாய்ஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 21 ஏகே-47 ரவுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதூய.
ராணுவத்தினர் வெளியிட்ட தகவலின்படி, 5 பயங்கரவாதிகள் யாரென அடையாளம் காணப்பட்டு இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் நாக வேலை திட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…