Gujarat Accident [Image source : ANI]
குஜராத், அகமதாபாத் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கார் மோதி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் செயலில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அகமதாபாத் – எஸ்ஜி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இரு லாரிகள் விபத்தில் சிக்கின. இதில் லாரி ஓட்டுநர் ஒருவர் தப்பியோடிய நிலையில் மீட்புப்பணிக்காக போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் சிலர் ஈடுபட்டனர்.
அந்த சமயம் அப்பகுதியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கவனிக்காமல் அதிகவேகத்துடன் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…