Categories: இந்தியா

அதிர்ச்சி! மூடநம்பிக்கையால் பறிபோன சிறுவனின் உயிர்!

Published by
பால முருகன்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை நதியில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. தங்கள் மகனுக்குப் ரத்த புற்று நோய் வந்ததைக் குணப்படுத்த கங்கை நதியில் ஐந்து நிமிடம் மூழ்கினால் ரத்த புற்றுநோய் தீரும் என்ற மூடநம்பிக்கையால்  அந்த 7 வயது சிறுவனை கங்கை நதியில் மூழ்க வைத்துள்ளனர். இதனால்  சிறுவனின் உயிர் பரிதாபமாக பறிபோனது.

உயிரிழந்த அந்த சிறுவனின் பெற்றோர் கங்கை நதியின் கரையில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர், அவரது அத்தை, சிறுவனை அழைத்து சென்று கங்கையில் பலமுறை அவரை மூழ்கடித்து மூச்சுத் திணறி இறக்கும் வரை மூழ்கடித்து இருக்கிறார்.

முதலில் தேசம்.. நாட்டிற்காக எதனையும் செய்ய வேண்டும்.! மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு.!

இதனை பார்த்து அதிர்ச்சியான அருகில் இருந்தவர்கள் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று கூறி அந்த பெண்ணை தடுக்க முயன்றனர். ஆனால் அவர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை கேட்காமல் மீண்டும் மீண்டும் தண்ணீரில் மூழ்கடித்து சிறுவனை எடுத்துள்ளார்.

தொடர்ச்சியாக மூழ்கடித்து , மூழ்கடித்து சிறுவனை எடுத்ததால் சிறுவன் மூச்சி திணறி பரிதமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸில் புகார் அளித்ததாக ஹர் கி பவுரி காவல் நிலையத்தின் எஸ்ஹோ பாவ்னா கைந்தோலா தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் தற்போது சிறுவனின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் சிறுவனின் மரணத்திற்கு காரணமான  அவருடைய அத்தையை போலீசார் கைது செய்தனர். சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் பெற்றோருடன் வசித்து வந்தவர் என்றும் போலீசார் தகவலை தெரிவித்துள்ளனர். பெற்றோர்களின் மூடநம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

10 minutes ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

1 hour ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

1 hour ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

2 hours ago

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

3 hours ago