Categories: இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

2024 மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் முன்னணி தலைவர் அறிவிப்பு.

அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் முன்னணி தலைவர் சந்தீப் பாதக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், 2024 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து “மகா ஜோதா” என்ற கூட்டணியை அமைப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது ஆம் ஆத்மி தனித்து போட்டி என்ற அறிவிப்பு வந்துள்ளது, கூட்டணி முறிகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியின் முடிவு பாஜவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

அதுவும், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொண்ட 4 நாட்களுக்குப் பிறகு, அக்கட்சியின் முன்னணி தலைவர் சந்தீப் பதக், 2024 லோக்சபா தேர்தல் உட்பட வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று சந்தீப் பாதக் கூறியுள்ளார். மேலும் சந்தீப் பாதக் கூறுகையில், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஆதரவைத் திரட்டவே பாட்னா கூட்டத்தில் ஆம் ஆத்மி கலந்துகொண்டது.

சிம்லாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. அரசுச் சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டால் நாங்கள் எந்தக் கூட்டத்திற்கும் செல்வோம்  என்றும் மத்திய பாஜக அரசு நாட்டை “அழிக்கிறது” எனவும் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். பின்னர் கூட்டம் முடிந்த பிறகு, எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பின்போது, அர்விந்த் கெஜ்ரிவால் புறப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

7 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago