Categories: இந்தியா

சிபிஎஸ்இ 12ம் வகுப்பை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியானது!

Published by
பாலா கலியமூர்த்தி

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  வெளியிட்டது சிபிஎஸ்இ. 

நாடு முழுவதும் இன்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டிருந்தத்து. அதன்படி,  http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.33% மாணவ, மாணவிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் திருவனந்தபுரம் 99.91%, 2வது இடத்தில் பெங்களூரு 98.64% மற்றும் 3வது இடத்தில் சென்னை 97.40% இருந்தது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் யார் முதலிடம், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் என்பதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிக்கவில்லை. மாணவர்களிடம் தேவையற்ற போட்டியை தவிர்க்கவே விவரங்கள் அறிவிக்கவில்லை என கூறப்பட்டது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்புத் பொதுத்தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சில மணி நேரம் முன்பு வெளிநாய நிலையில் தற்போது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையத்தில் மாணவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

34 minutes ago

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

55 minutes ago

“அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை” – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!

சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…

1 hour ago

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…

2 hours ago

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

3 hours ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

3 hours ago