Air India [File Image]
மும்பை-டெல்லி ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது அதன் தரையில் மலம், சிறுநீர் கழித்ததாக கூறி டெல்லியில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏஐசி 866 விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 (குடிபோதையில் ஒருவரால் பொது இடங்களில் தவறான நடத்தை) ஆகியவற்றின் கீழ் ராம் சிங் என்ற பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விமானத்தில், அவர் 17F-ல் அமர்ந்திருந்தார் என்றும், குடி போதையில் விமானத்தின் 9வது வரிசையில் அவர் மலம், சிறுநீர் மற்றும் எச்சில் துப்பியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவம் முதல்முறையில்ல… முன்னதாக, இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று நடந்துள்ளது. போதையில் இருந்த ஒருவர் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் சக பயணி மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், மற்றொரு சம்பவம், பத்து நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 6 அன்று பாரிஸ்-புது டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பதிவாகியுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…