ED New Director Rahul Navin [File Image]
மத்திய அமலாகத்துறையின் இயக்குனராக செயல்பட்டு வந்த சஞ்சய் மிஸ்ராவின் பதவி காலத்தை மத்திய அரசு தொடர்ந்து மூன்று முறை நீட்டித்து வந்தது. இதன் காரணத்தால் மத்திய அரசு மீது காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
இது வழக்குகளில் சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், ஜூலை 31 வரை மட்டுமே மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குனராக செயல்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதாவது சில முக்கிய வழக்குகளை சஞ்சய் மிஸ்ரா விசாரித்து வருவதால், அதன் காரணமாக அவரது பதவி செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பேரில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15 வரை மட்டுமே மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் இருக்க வேண்டும். அதற்கு மேல் பணி நீட்டிப்பு குறித்த கோரிக்கைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை இடைக்கால புதிய இயக்குனராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1993 பேட்ச் இந்திய வருவாய்த்துறை பயிற்சி (IRS) பெற்றவர் இந்த அறிவிப்பானது நேற்று வெளியாகியுள்ளது. ராகுல் நவீன் பொறுப்பு இயக்குனராக மட்டுமே செயல்படுவார் எனவும், விரைவில் புதிய இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பணியில் அமர்த்தப்படுவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…