Categories: இந்தியா

அசாம் வெள்ளம்: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்..! அமித்ஷா உறுதி..!

Published by
செந்தில்குமார்

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழலை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கினால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது.

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பக்சா, பர்பேட்டா, தர்ராங், துப்ரி, கோல்பாரா, கம்ரூப், லக்கிம்பூர், நல்பாரி மற்றும் உடல்குரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சத்திற்கும் (4,07,700) அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவைத் தொடர்பு கொண்டு, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில்,  அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மக்கள் தவித்து வருகின்றனர். நான் முதல்வர் ஹிமந்தபிஸ்வாவிடம் பேசி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளேன். என்டிஆர்எஃப்(NDRF) குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

6 minutes ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

32 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

51 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago