Junmoni Rabha [Image source : file image ]
அசாமின் ‘பெண் சிங்கம்’ என பலராலும் புகழப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ஜுன்மோஜி ரபா சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநில காவல்துறையின் பெண் சப்-இன்ஸ்பெக்டர் நேற்று அதிகாலை நாகோன் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் உயிரிழந்தார். பாலிவுட் போலீஸ் படங்களுக்குப் பிறகு, ‘பெண் சிங்கம்’ அல்லது ‘தபாங் காப்’ என்று பலராலும் அழைக்கப்படும் ஜுன்மோனி ரபா, சீருடையில் இல்லாமல் தனது காரில் தனியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கலியாபோர் சப்-டிவிஷனின் ஜகலபந்தா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சருபுகியா கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலை 2:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகவும், இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குள்ள மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில், இந்த விபத்து தொடர்பாக, உத்தரபிரதேசத்தின் பதிவு எண்ணைக் கொண்ட கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி விட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது, அவரை தேடும் வேட்டையில் அசாம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…