parliment [Imagesource : Representative]
கடந்த 20- ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 7 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்ட நிலையில் இரு அவைகளும் முடங்கியது.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பின் இன்று 8-வது நாளாக மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்ட நிலையில், 8-வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது நாடு முழுவதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் அவரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து முழக்கமிட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று 8-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…