Puducherry CM Rangasamy [Image source : PTI]
அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 10% உள் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உள்ஒதுக்கீடு குறித்த கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், தற்போது உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 10% உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. இஇதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், நடப்புக் கல்வி ஆண்டிலேயே 10 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…