Categories: இந்தியா

Cauvery Issue : தமிழக அரசு தேவையில்லாமல் தொல்லை தருகிறது.! கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து.!

Published by
மணிகண்டன்

காவிரி நதியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று காவிரி மேலாண்மை வாரியம் கூறியும் உரிய அளவு தண்ணீரை கடந்த சில மாதங்களாக கர்நாடக அரசு திறந்து விடவில்லை. மழை வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக தண்ணீர் திறந்து விடவில்லை என கர்நாடக அரசு தொடர்ந்து விளக்கம் கூறிவந்தது.

இதனை அடுத்து அண்மையில் காவிரி ஒழுங்காற்று வாரிய ஆலோசனை கூட்டமும், காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டமும் அடுத்தடுத்த நாட்கள் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்று பேசினார். இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் கர்நாடக அரசு காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கும் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்த அணை கட்டுவதற்கு மத்திய அரசு இன்னும் உரிய அனுமதி வழங்கவில்லை.

இந்த விவகாரங்கள் குறித்து அண்மையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்பது எங்கள் உரிமை. அது கர்நாடகாவுக்கு சொந்தமான இடம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் தொல்லை தருகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருந்து வருகிறது. இதில் அரசியல் செய்ய மாட்டோம் என அவர்கள் கூறினாலும், தற்போது மத்திய அரசு இதில் அரசியல் செய்து வருகிறது என்றும் சித்தராமையா குற்றம்  சாட்டினார்.

இதனை அடுத்து காவேரி நீர் விவகாரம் குறித்து பேசுகையில், காவேரியில் தண்ணீர் இருக்கும் போது உச்சநீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறந்து விடுகிறோம். அதே போல் தண்ணீர் இல்லாத வறட்சி காலத்திலும் தண்ணீர் திறக்க கூறுகிறார்கள். அப்போது பேரிடர் காலத்தில் தண்ணீர் திறப்பது போல தான் திறக்க முடியும்.

ஆனால், இப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட காரணத்தாலேயே தண்ணீர் திறக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை வரவுள்ளது. அதில் கர்நாடக அரசு உரிய விளக்கம் அளிக்கும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

5 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago