chandrababu naidu cm [file image]
புதுடெல்லி : ஆந்திராவின் 18ஆவது முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், 11.27 மணக்கு அவருக்கு அம்மாநில ஆளுநர் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில், “சந்திரபாபு நாயுடு எனும் நான்” என்று அவர் பிரமாண உறுதி மொழியை சொன்னபோது, ‘ஜெய் சந்திரபாபு நாயுடு, ஜெய் சந்திரபாபு அண்ணகாரு’ என அவரது ஆதரவாளர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.
முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுடன் 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. இதில், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனசேனாவுக்கு மூன்று அமைச்சரவை பதவிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடமும் வழங்கப்படுகின்றன.
தற்பொழுது, ஆந்திராவின் 18ஆவது முதல்வராக பொறுப்பேற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வாழ்த்தினார். இந்த விழாவில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்களும், NDA கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சந்திரபாபுவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்தும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும், தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…