பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு வரும் திங்கள்கிழமை மாலைக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் பதிலளிக்கவில்லை என்றால் எதுவும் சொல்ல முடியாது என்று கருதுவதாகவும், மீண்டும் தொடர்பு கொள்ளாமல் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 21 அன்று ராஜஸ்தான் சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து இந்திய தேர்தல் ஆணையம் புகாரைப் பெற்றதை அடுத்து இதற்க்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அந்த புகாரில் அக்டோபர் 20 ஆம் தேதி தௌசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறாக பேசியவதாகவும், பிரதமர் மோடியின் தனிப்பட்ட மத பக்தியையும் பிரியங்கா காந்தி இழிவுப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் கட்சித் தலைவர்கள் அனில் பலுனி மற்றும் ஓம் பதக் ஆகியோர் அடங்கிய பாஜக பிரதிநிதிகள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…