PMModiNDA MeetDelhi [Image-ET]
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக்கூட்டத்தில் கட்சிகள் பங்கேற்பது மகிழ்ச்சி என பிரதமர் மோடி ட்வீட்.
டெல்லியில் இன்று பாஜக தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 2024இல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து, தேர்தல் வேலையில் பிரதான கட்சிகள், மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தலைமையில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில், கலந்து கொள்ள கூட்டணி கட்சியின் தலைவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவீட்டில், இன்று நடைபெறும் நமது தேசிய ஜனநாயக கூட்டணி(NDA)யின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து கூட்டணி கட்சிகள் வந்திருப்பது மகிழ்ச்சி எனவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும், கொள்கைகளின் நிறைவேற்றம் ஆகியவற்றிற்காகவும் நமது கூட்டணியில் ஆலோசிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் கூட்டணி குறித்து முடிவு செய்ய ஆலோசனைக்கூட்டம் இன்று பெங்களுருவில் நடைபெற்று முடிந்த நிலையில், டெல்லியில் ஆளும் பாஜக தலைமையில் கூட்டம் நடப்பது கவனிக்கத்தக்கது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…