Supreme court of India [File Image]
டெல்லி : நடப்பாண்டு மருத்துவ சேர்க்கைக்காக அண்மையில் நடைபெற்று முடிந்த நீட் நுழைவுத்தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்றது. நீட் மருத்துத்தேர்வு நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைகள் முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கில் சில முக்கிய உத்தரவுகளை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. அதன்படி, நீட் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு மையம் ஒழுங்குபடுத்த வேண்டும். நீட் வினாத்தாள்களை கொண்டு செல்கையில் பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத் வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது .
மேலும், தேர்வு முறையில் இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட அடையாளச் சோதனைகள், தேர்வு மையங்களின் சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அதில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை புகுத்தி சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழு உறுதியளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
NEET-UG 2024 வினாத்தாள்களில் முழுதான விதிமீறல் எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு என்பது பாட்னா மற்றும் ஹசாரிபாக் பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துளளது. அதுபற்றிய விசாரணையை சிபிஐ தொடர்ந்து வருகிறது.
தேசிய தேர்வு முகமையின் செயல்முறைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் தனது தீர்ப்பில் எடுத்துக்காட்டியுள்ளதாக உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. தற்போது எழுந்துள்ள பிரச்னைகள் மீண்டும் நிகழாமல் இருக்க, இந்த ஆண்டிலேயே மத்திய அரசு நீட் விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…
அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப்…