Categories: இந்தியா

உ.பி-யில் கொடூரம்.. வீடியோ எடுத்து மிரட்டி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.!

Published by
மணிகண்டன்

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தகவல் அறிந்து சென்ற ஆக்ரா போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு பெண் உட்பட 4 ஆண்கள் என 5 பேரை கைது செய்தனர்.

சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு ஆக்ராவில் உள்ள காவல்நிலையத்திற்கு ஒருவர் போன் செய்து , ஆக்ராவில் உள்ள பணக்கார தங்கும் விடுதியில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

ரசாயன கிடங்கில் பற்றிய தீ… அடுக்குமாடி குடியிருப்பு வரை தீ பரவி 6 பேர் உயிரிழப்பு.!

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஆக்ரா காவல் துறையினர், அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை காட்டி மிரட்டி அந்த பெண்ணை கொடூர கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

அப்போது அந்த பெண்ணை உடல்ரீதியாக தாக்கி, மதுகுடிக்க வற்புறுத்தியும் அந்த கும்பல் சித்ரவதை செய்துள்ளாதாக தெரிகிறது. இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் , பெண்ணின் மருத்துவ அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,   ஆக்ரா உதவி காவல் ஆணையர் அர்ச்சனா சிங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago