Punjab Ex Deputy CM Om prakash soni [Image source : India Today]
பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் ஓம் பிரகாஷ் சோனி லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளர்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருவமான ஓம் பிரகாஷ் சோனி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016 மற்றும் 2022க்கு இடையிலான காலகட்டத்தில் துணை முதலமைச்சராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சோனி. இவர் அந்த சமயத்தில் இவரது குடும்ப வருமானமாக 4.5 கோடி ரூபாய் இருந்தது என்றும், ஆனால் அவர் செலவு செய்த செலவுத்தொகை மட்டும் 12.5 கோடியாக இருக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபி சோனி தனது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெயரில் சொத்துக்களை வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறையால் நேற்று சண்டிகரில் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்து சோனி, அமிர்தரசுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…