Categories: இந்தியா

டெல்லியில் மர்மகும்பல் துப்பாக்சூடு.! இரண்டு பெண்கள் உயிரிழப்பு..! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்.!

Published by
செந்தில்குமார்

புதுடெல்லியில் இரண்டு பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லியின் ஆர்.கேபுரத்தில் உள்ள அம்பேத்கர் பஸ்தி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பிங்கி மற்றும் ஜோதி என்ற இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரண்டு பெண்களையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருந்தும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இவர்களின் சகோதரரைத் தேடி வந்ததாகவும், பிறகு இவர்கள் இருவரையும் சுட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையில் பணத் தகறாறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அர்ஜுன், மைக்கேல் மற்றும் தேவ் என அடையாளம் காணப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், நீண்ட விசாரணைக்கு பிறகு சரியான காரணம் கண்டறியப்படும் என்று கூறிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் எண்ணங்கள் இரு பெண்களின் குடும்பங்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணரத் தொடங்கியுள்ளனர்.

tweet [Image Source : abplive]

டெல்லியின் சட்டம் ஒழுங்கை கையாள வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல், ஒட்டுமொத்த டெல்லி அரசையும் பிடிக்க சதி செய்கிறார்கள். இன்று, டெல்லியின் சட்டம் ஒழுங்கு எல்ஜிக்கு பதிலாக ஆம் ஆத்மி அரசாங்கத்தின் கீழ் இருந்திருந்தால், டெல்லி பாதுகாப்பாக இருந்திருக்கும். என்று கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

10 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

11 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago