Student massacre [File Image]
டெல்லி மாளவியா நகரில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மாளவியா நகரில் உள்ள ஸ்ரீ அரபிந்தோ கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள பூங்காவில், 25 வயது உடைய கமலா நேரு கல்லூரி மாணவி ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளார். இதன்பின் சம்பவ இடத்திலேயே அந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
இதன்பின் தகவல் அறிந்து, தெற்கு டெல்லியின் டிசிபி மற்றும் பிற மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து கூறிய டிசிபி சந்தன் சவுத்ரி, தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே 25 வயது இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உடல் அருகே இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்களது முதற்கட்ட விசாரணையில் சிறுமியை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார். இதனையடுத்து, மாணவியை கொலை செய்ததாக கூறப்படும் நபரை கைது செய்தனர்.
இந்த முழுப் பிரச்சினையும் காதல் மற்றும் திருமணத்தை மறுத்ததால் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் வேலையில்லாமல் இருந்ததால் பெண்ணின் குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அவருடன் பேசுவதை நிறுத்தினார்.
இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞன், மாணவியை கொலை செய்துள்ளதாகவும் தெற்கு டெல்லியின் டிசிபி சந்தன் சவுத்ரி கூறினார். மேலும், அந்த இளைஞன் டெலிவரி செய்யும் பணிபுரியும் இர்பான் என போலீஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77)…
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…