ஹரியானாவில் பெண்ணிடம் 20 நாள் கொரோனா சிகிச்சைக்கு 14 லட்சம் கட்டண கொள்ளை

Published by
Hema

ஹரியானவில் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு கொள்ளை கட்டணம் வசூலிப்பு.

இந்தியாவில் கொரோனா பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த பேரிடர் சூழலை பயன்படுத்திக் கொண்டு சில மருத்துவமனைகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர், இதனைக் கண்டித்து அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டிருந்தது.

இருப்பினும் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனையடுத்து ஹரியானவில் உள்ள பஞ்ச்குலாவின் பராஸ் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அதாவது ஹரியானவில் ஆர்த்தி என்ற பெண் தனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து பஞ்ச்குலாவின் பராஸ் மருத்துவமனையில் ஏப்ரல் 12 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் 20 நாட்களுக்கான சிகிச்சைக் கட்டணமாக 34 பக்கம் கொண்ட கட்டண ரசீதை மருத்துவமனை கொடுத்துள்ளது.

அதில் சிகிச்சைக்கான கட்டணம் 14 லட்சம் இருப்பதை பார்த்து ஆர்த்தி பேரதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மருத்துவமனையின் கட்டாயத்தால் 13.81 லட்சம் உறவினர்களிடம் வாங்கி கட்டியுள்ளார்.

இதனையடுத்து மே 3 ஆம் தேதி அவர் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் மருத்துவமனையின் கட்டணகொள்ளையால் ஆர்த்தி மன உழைச்சல் அடைந்து அமைச்சர்கள் மற்றும் சுகாதார செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் தான் இப்போது விதவை என்றும் தனக்கு 13 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் கொரோனாவால் இறந்த தன் கனவரின் சிகிச்சைக்கு பராஸ் மருத்துவமனை அதிக கட்டணம் வசூலித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக்கண்டித்து மருத்துவமனைக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனைப்பற்றி மருத்துவமனை கூறுகையில் அவர் கணவரின் இறப்புக்கு மறுநாள் தான் அரசின் கட்டண நிர்ணய அறிக்கை வந்ததாகவும், அவரின் குடும்பத்திற்கு ஏற்கனவே இந்த தகவல் தெரியும் என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Hema

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago