air pollution [Image source : AFP ]
காற்று மாசுபாட்டைத் தடுக்கவும், எதிர்த்துப் போராடவும் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (வியாழன்) 460 ஆக இருந்த டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI), தற்போது 376 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் பேருந்துகள், லாரிகள், மற்ற மாநில டாக்சிகள் ஆகியவை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக தினசரி கூடுதலாக 20 மெட்ரோ ரயில் சேவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காற்று மாசு உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களையும் பாதிக்கலாம்.
இந்த நிலையில் டெல்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு, காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான ஆலோசனையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த ஆலோசனைப்படி, சுகாதாரத் துறைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் நோய்களை கண்காணிக்க தயார்நிலையில் இருக்க வேண்டும்.
அவசரநிலைகள், நோயாளிகளின் மருத்துவப் பிரிவுகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவுகளில் தேவையான பராமரிப்பு தயாரிப்புகளை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவமனைகளுக்கு ஆலோசனைகளை வழங்க மாநில சுகாதாரக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, படுக்கைகள் மற்றும் மருந்துகள் மற்றும் கேஸ் மேனேஜ்மென்ட் தொடர்பான உபகரணங்களை அதிகரிக்க வேண்டும்.
காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்க மரக்கட்டைகள் மற்றும் கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். டீசலால் இயங்கும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் வெளியே சென்று விளையாடுவது மற்றும் வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படக்கூடிய மக்கள், உடல்நலப் பிரச்சினைக்கான அறிகுறிகளை உணரும்போது மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…