Categories: இந்தியா

மீண்டும் ஜார்கண்ட் முதல்வராகும் ஹேமந்த் சோரன்.! இன்று மாலை பதவியேற்பு.!

Published by
மணிகண்டன்

ராஞ்சி: இன்று மாலை 5 மணிக்கு ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நில மோசடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி கடந்த வாரம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். அமலாக்கத்துறை சார்பில் சோரனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.

இதனை அடுத்து மீண்டும் முதல்வராகும் முனைப்பில் ஹேமந்த் சோரன் முயற்சித்து வருகிறார். அவரது கட்சியினரும், கூட்டணி கட்சி தலைவர்களும் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக சம்பாய் சோரன் தனது முதலமைச்சர் பதவியை  நேற்று ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து ஹேமந்த் சோரனை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்து இருந்தார். இன்று பகல் 1 மணியளவில் ஹேமந்த் சோரன் மற்றும் மாநில கூட்டணி கட்சி தலைவர்களுடன் ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்று பதவியேற்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார் என ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

4 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

23 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

46 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

60 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago