Categories: இந்தியா

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

Published by
பாலா கலியமூர்த்தி

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. முன்பு இதுவரை இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சில இடங்களில் இயல்பைவிட வெயிலின் அளவு உச்ச நிலையில் காணப்படுவதால் வெப்ப அலை வீசியும் வருகிறது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையமும் சில மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்கள் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த சூழலில் வெப்ப அலையில் இருந்து நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்தும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெயிலின் போது பின்பற்ற வேண்டியவை:

  • தண்ணீர் தாகம் இல்லாவிட்டாலும், உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் அல்லது நீர்சத்தை அதிகரிக்கும் ORS என்ற உப்பு, சக்கரை கரைசலை குடிக்க வேண்டும்.
  • அதிக வெப்பம் உள்ள நேரங்களில் (12PM – 4PM) வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், பணிகளை தகுந்தவாறு மாற்றியமைக்க வேண்டும்.
  • வெயிலில் அதிகமாக இருக்கும் சமயத்தில் நிழல் மற்றும் மூடப்பட்ட பகுதிகளில் நிற்பது அவசியமான ஒன்று.  இதனை குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பின்பற்ற வேண்டும்.
  • மேலும், வெயில் காலத்தில் லைட் கலர் காட்டன் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தலையில் துணி, தொப்பி அல்லது குடையை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

7 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

7 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

8 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

9 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

9 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

9 hours ago