PM Narendra Modi [Image source : Twitter/@ANI]
பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தினை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் மங்குபாய் சி படேல், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தினை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெருமான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து ஒருவரையொருவர் காப்பாற்ற, பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர். எனது உத்தரவாதம் என்னவென்றால், அவர்களில் யாரையும் நான் விட்டுவைக்க மாட்டேன். மோசடி செய்தவர்களை கடுமையாக தண்டிப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…