Categories: இந்தியா

எனது அடுத்த ஆட்சியில், இந்தியா உலகின் 3-வது மிகப்பெரும் பொருளாதார நாடாக மாறும்- பிரதமர் மோடி

Published by
Muthu Kumar

3 வது முறை அமையவுள்ள எனது ஆட்சியில், இந்தியா உலகின் 3-வது  மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (IECC) வளாகம் மறுசீரமைக்கப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாரத் மண்டபம் என மறுபெயரிடப்பட்ட அதன் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தனது மூன்றாவது ஆட்சியில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்றும், நாட்டின் வளர்ச்சிப் பயணம் நிறுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

நிதி ஆயோக் அறிக்கையின் தரவுகளை, சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கொள்கைகள் நாட்டை சரியான திசையில் கொண்டு செல்கின்றன என அவர் தெரிவித்தார்.

இந்த சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகம் (IECC), செப்டம்பரில் இந்தியா தலைமையில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துகிறது, இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

1 hour ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

1 hour ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago