[File Image]
கணக்கு காட்டாமல் அதிகம் சம்பாதிப்பதாக கூறி கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தற்போது உள்ள இணைய உலகத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வைத்துக்கொண்டு , அதனை சரியாக பயன்டுத்தி, அவர்களுக்கு பிடித்தார் போல வீடியோ பதிவிட்டு, அதன் மூலம் பணம் ஈட்டும் வேலையில் யு-டியூபர்கள் களம் இறங்கி வருடங்கள் கடந்து விட்டது. யுடியூபர்கள் தங்கள் பக்கத்தில் பதிவிடும் வீடியோக்கள், பதிவுகளுக்கு எந்த அளவுக்கு பார்வையாளர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு வருமானம் வரும்.
மேலும் தனி விளம்பரம், விழாக்களுக்கு செல்லும்போது வருமானம் என யூடியூபர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள் என்ற செய்தியும் உண்டு. இந்த வருமானத்தை சரிவர கணக்கில் குறிப்பிடாமல் இருப்பதாக கூறி கேரளாவில் பிரபல யுடியூபர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் நடிகை பியல் மானி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட யுடியூபர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். இவர்களில் பலர் வருடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு சிலர் தங்களுக்கு வரும் வருமானத்தை வருமான வரி கணக்கில் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த ரெய்டு நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…