Chandrayaan3Landing [file image]
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. மிகவும் சவாலான இந்த பணியை வெற்றிகரமாக சாத்தியமாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது X தள பக்கத்தில், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு நமது விஞ்ஞானிகள் சாட்சியமளித்துள்ளனர்.
இந்தியா இப்போது விண்வெளியில் சூப்பர் லீக்கில் உள்ளது. அனைத்து பெருமைமிக்க கட்டிடக் கலைஞர்களுக்கும், பயணத்தின் பங்குதாரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கம்பீரமான தருணத்தைக் கொண்டாடுவோம், மேலும் அறிவு மற்றும் பயன்பாடுகளின் எல்லைப் பகுதிகளில் இந்தியா மேலும் முன்னேற பிரார்த்தனை செய்வோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…