Categories: இந்தியா

INDIA: வரும் 13ம் தேதி “இந்தியா” கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

இம்மாதம் தொடக்கத்தில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் 3வது கூட்டத்தில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால், தேஜஸ்வி யாதவ், லல்லன் சிங்  ஹேமந்த் சோரன், சஞ்சய் ராவத், அபிஷேக் பானர்ஜி, ராக்வத் சத்தா, தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா உமர் அப்துல்லா இடம்பெற்றனர்.

மேலும், மெகபூபா முப்தி, டி.ராஜா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இந்திய கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் வரும் 13ம் தேதி இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்.18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடுகிறது. இதுபோன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் நாட்டின் பெயர் மாற்றம் உள்ளிட்டவையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

42 minutes ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

1 hour ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

14 hours ago