Intel India Head [Image-mint]
இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் நிவ்ருதி ராய், 29 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்துவந்த நிவ்ருதி ராய், தனது 29 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ராஜினாமா செய்து, இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தில் தலைமை பதவி ஏற்கவுள்ளார். முதலீட்டு நிதி நிறுவனமான இன்வெஸ்ட் இந்தியாவை வழிநடத்த நிவ்ருதி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்வெஸ்ட் இந்தியா அமைப்பின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபக் பாக்லா, பதவியில் இருந்து விலகிய பிறகு அவரிடமிருந்து நிவ்ருதி ராய் தலைமை பதவி ஏற்கவிருக்கிறார். இன்டெல் நிறுவனம் நிவ்ருதி ராய் வெளியேறுவதை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
1994 இல் இன்டெல்லில் டிசைன் இன்ஜினியராக சேர்ந்த, நிவ்ருதி ராய் 2005ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் உள்ள இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதன்பின் இன்டெல் இந்திய அலுவலகத்திற்கு மாற்றமாகி, 2016 முதல் இன்டெல் இந்தியா நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…