J-K Police terrorist [file image]
ஜம்மு & காஷ்மீர்: கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாசி மாவட்டத்தில்ஷிவ் கோரி கோவிலில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு 53 பேர் பயணித்த பேருந்து மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 9 பேர் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையாக அறிவித்தார் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர். இந்த தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் காவல்துறை பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் ஓவியத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும், அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் விளக்கத்தின் அடிப்படையில் பயங்கரவாதியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…
ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…