Delhi CM Arvind Kejriwal [Image source ; Twitter/@RozanaSpokesman]
டெல்லி, நஜாப்கரில் உள்ள கனவ் சிறுவன் அரியவகை மரபணு நோயால் பாதிப்படைந்துள்ளான். ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) எனும் மரபணு நோயினால் பாதிக்கப்பட்டால், உடலில் உள்ள நியூரான்கள் பாதிப்படையும். அது முதுகெலும்பில் அமைந்துள்ள நரம்பு செல்கள்களை பாதித்து, தசை இயக்கத்தை பாதிப்படைய செய்துவிடும்.
பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு பிறகு, அமெரிக்காவில் இருந்து 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. சிறுவன் கனவின் பெற்றோர் ஆம் ஆத்மி எம்பி சஞ்சீவ் அரோராவை தொடர்பு கொண்டனர். அவர் மூலம் மக்களிடம் பணம் சேகரிக்கும் க்ரவுட் ஃபண்டிங் முறை தொடங்கபட்டது.
இதில் பொதுமக்கள், எம்பிக்கள், பிரபலங்கள் என பலர் பணம் கொடுத்தனர். இதன் மூலம் 10.5 கோடி ரூபாய் பணம் வசூலாகி உள்ளது. இதனை தொடர்ந்து மருந்தை கொண்டுள்ள அமெரிக்க நிறுவனத்திடம் டெல்லி அரசு தொடர்பு கொண்டு மருந்தை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளனர்.
இந்த மருந்து கிடைத்து அதனை சிறுவன் கனவிற்கு செலுத்தியதுடன் தற்போது சிறுவன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பணம் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 10.5 கோடி ரூபாய்க்கு மருந்தை விற்க ஒப்புக்கொண்டதற்கா அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…
டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…
சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…